வளைகுடா நாடுகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக பாதிப்பு

1 mins read
ae727b9b-f9e7-4daf-8e60-85273a724976
வளை­குடா நாடு­களில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள், பலி­யா­ன­வர்­களில் பெரும்­பா­லோ­னர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்று சுகா­தார அமைச்­சு­கள் தெரி­விக்­கின்­றன. துபாயில் உள்ள தொழிற்கூடங்களில் ஊழியர்களின் உடல் வெப்பநிலை அன்றாடம் பதிவுசெய்யப்படுகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

துபாய்: வளை­குடா நாடு­களில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­கள், பலி­யா­ன­வர்­களில் பெரும்­பா­லோ­னர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்று சுகா­தார அமைச்­சு­கள் தெரி­விக்­கின்­றன.

வெளி­நாட்டு ஊழி­யர்­களில் பெரும்­பா­லா­ன­வர்­கள் இந்­தியா, பாகிஸ்­தான், பங்­ளா­தேஷ், நேப்­பா­ளம் மற்­றும் பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்­த­வர்­கள்.

ஐக்­கிய அரபு சிற்­ற­ர­சு­கள் மற்­றும் வளை­குடா நாடு­க­ளின் மருத்­து­வ­ம­னை­கள், வங்­கி­கள், கட்­டு­மா­னத் துறை­கள், தொழிற்­சா­லை­கள் உள்­ளிட்­ட­வற்­றில் மில்­லி­யன் கணக்­கான வெளி­நாட்­டி­னர் பணி­யாற்­று­கின்­ற­னர்.

இங்கு கிரு­மித் தொற்று பர­வத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து 26,600 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். 166 பேர் மாண்­ட­னர்.

கிரு­மித்­தொற்­றுக்­குப் பலி­யா­ன­வர்­களில் பெரும்­பா­லா­னோர் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் என்று கூறப்­படும் நிலை­யில், அவர்­க­ளது சட­லங்­கள் சொந்த ஊருக்­குத் திருப்பி அனுப்­பப்­ப­டு­வது இல்லை.

அவர்­க­ளது இறு­திச் சடங்­கு­கள் உற்­றார், உற­வி­னர்­கள், நண்­பர்­கள் என கடைசி விடை­ய­ளிக்க யாரும் இல்­லா­ம­லேயே நடை­பெ­று­கிறது.

"உல­கம் மாறி­விட்­டது. மாண்­ட­வர்­க­ளுக்கு விடை­ய­ளிக்க யாரும் வரு­வ­தில்லை. இப்­பொ­ழு­தெல்­லாம் தனி­யா­கவே இறக்­கி­றார்­கள்," என்­றார் துபா­யின் தெற்கு பகு­தி­யில் உள்ள இந்து தகன பூமி­யின் மேலா­ளர் ஈஸ்­வர் குமார்.

கொரோனா தொற்­றால் இறந்த 50 வயது இந்­திய ஆட­வர் ஒரு­வ­ரின் இறு­திச் சடங்­கிற்கு யாரா­வது வரு­வார்­கள் என்று காத்­தி­ருந்­த­போ­தும், ஒரு­வ­ரும் வராத நிலை­யில் தகன பூமி ஊழி­யர்­களே அதற்­கான ஏற்­பா­டு­க­ளைச் செய்தனர்.

இந்­தியா விமா­னச் சேவை­களை நிறுத்­தி­யுள்­ள­தால், கிரு­மித்­தொற்று தவிர வேறு கார­ணங்­க­ளால் இறந்­த­வர்­க­ளின் உடல்­க­ளை­யும் சொந்த ஊருக்கு அனுப்ப முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.