இன்னொரு முறை கிருமித்தொற்று: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

இன்னொரு முறை கிருமித்தொற்று: அமெரிக்காவுக்கு எச்சரிக்கை

2 mins read
b909096d-f216-47de-aa07-610ce4cc18f6
உலகமே உறங்கிக் கொண்டிருந்தாலும் இரவு, பகல் பாராமல் பெரும் பரபரப்புடன் காணப்படும் நியூயார்க்கின் டைம்ஸ் ஸ்கொயர் ஆரவாரமின்றி அமைதியாகக் காணப்படுகிறது. கொரோனா கிருமி பரவலால் நியூயார்க் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. படம்: இபிஏ -

வாஷிங்டன்: அமெ­ரிக்­கா­வில் அடுத்த குளிர்­கா­லத்­தின்­போது அங்கு மீண்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புள்­ளது என்­றும் அது இன்­னும் அதிக அழிவை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருக்­கும் என்­றும் அந்­நாட்­டின் சுகா­தா­ரத் துறை உய­ர­தி­காரி ஒரு­வர் எச்­ச­ரித்­துள்­ளார்.

அமெ­ரிக்க நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு மையத்­தின் இயக்­கு­ந­ரான ராபர்ட் ரெட்­ஃபீல்ட், அமெ­ரிக்­கர்­கள் தங்­களை ஆயத்­தப்­ப­டுத்­திக்­கொள்ள அடுத்த சில மாதங்­க­ளைப் பயன்­ப­டுத்­திக்­கொள்ள வேண்­டும் என்­றும் சளிக்­காய்ச்­சல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள வேண்­டும் என்­றும் அறை­கூ­வல் விடுத்­துள்­ளார்.

"நம் நாட்­டில் அடுத்த குளிர்­கா­லத்­தின்­போது மீண்­டும் ஒரு­முறை கொரோனா கிரு­மித்­தொற்று அலை­ய­டிக்க வாய்ப்­புள்­ளது. இப்­போது நாம் எதிர்­கொள்­வ­தைக் காட்­டி­லும் அது இன்­னும் மோச­மா­ன­தாக இருக்­கும்," என்று வாஷிங்­டன் போஸ்ட் பத்­தி­ரி­கைக்கு அளித்த நேர்­கா­ண­லின்­போது திரு ரெட்­ஃபீல்ட் தெரி­வித்­தார்.

"சளிக்­காய்ச்­சல் தொற்­றை­யும் கொரோனா கிரு­மித்­தொற்­றை­யும் ஒரே நேரத்­தில் நாம் எதிர்­கொள்ள வேண்­டி­யி­ருக்­கும்," என்­று அவர் கூறினார்.

அமெ­ரிக்­கா­வில் ஏற்­கெ­னவே 800,000க்கும் மேற்­பட்­டோ­ரை கொரோனா கிருமி தொற்­றி­விட்­டது. அத­னால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் 45,000ஐத் தாண்டி­விட்­டது.

வீட்­டி­லேயே இருக்­கும்­ப­டி­யான உத்­த­ர­வா­லும் பெரும்­பா­லான வர்த்­தக நிறு­வ­னங்­களும் பள்­ளி­களும் மூடப்­பட்டு இருப்­ப­தா­லும் அமெ­ரிக்­கா­வில் கிரு­மிப் பர­வலை மெது­வ­டை­யச் செய்­தி­ருப்­ப­தாக திரு ரெட்­ஃபீல்­டும் சுகா­தா­ரத் துறை அதி­கா­ரி­கள் பல­ரும் தெரி­வித்­துள்­ள­னர்.

ஆயி­னும், அந்­தக் கட்­டுப்­பா­டு­கள் அமெ­ரிக்­கப் பொரு­ளி­ய­லி­லும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. குறைந்­தது 22 மில்­லி­யன் பேர் கடந்த நான்கு வார­கா­ல­மாக வேலை­யின்­றித் தவிக்­கின்­ற­னர்.

இந்­நி­லை­யில், முடக்க நட­வ­டிக்­கை­கள் படிப்­ப­டி­யா­கத் தளர்த்­தப்­பட்­டா­லும் சமூக இடை­வெ­ளியை மக்­கள் தொடர்ந்து கடைப்­பி­டிக்க வேண்­டி­யது அவ­சி­யம் என திரு ரெட்­ஃபீல்ட் வலி­யு­றுத்தி இருக்­கிறார்.

அதே நேரத்­தில், கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை விரைந்து அடை­யா­ளம் காணும் வகை­யில் சோதனை முறையை முடுக்­கி­விட வேண்­டும் என்­றும் தட­ம­றி­தல் மூலம் அவர்­க­ளு­டன் நெருங்­கிய தொடர்­பில் இருந்­த­வர்­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும் என்­றும் பொதுச் சுகா­தார அதி­கா­ரி­களை அவர் கேட்­டுக்­கொண்­டுள்­ளார்.

இத­னி­டையே, வீட்­டி­லேயே இருப்­ப­தற்­கான உத்­த­ரவு போன்ற கட்­டுப்­பா­டு­க­ளைத் திரும்­பப் பெறக் கோரி பல மாநி­லங்­களில் மக்­கள் போராடி வரு­வது குறித்­தும் அதற்கு அதி­பர் டோனல்ட் டிரம்ப் ஆத­ரவு அளித்­துள்­ளது குறித்­தும் திரு ரெட்­ஃபீல்­டி­டம் கேட்­கப்­பட்­டது.

அதற்கு, "அது கைகொ­டுக்­காது," என்று அவர் பதி­ல­ளித்­தார்.

நாடு தழு­விய தட­ம­றி­தல் கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்­து­வ­தன் மூலம் புதி­தாக கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­மல் தடுக்க முடி­யும் என்­றும் அந்­தப் பணி­களில் கிட்­டத்­தட்ட 300,000 பேர் ஈடு­ப­டுத்­தப்­பட வேண்­டும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.