ஜகார்த்தா: கொவிட்-19 கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, ரமலான் நோன்பை வீட்டிலேயே கடைப்பிடிக்குமாறு இந்தோனீசிய முஸ்லிம்களை அந்நாட்டின் பெரும் இஸ்லாமிய அமைப்புகளான நஹ்தலத்துல் உலமா மற்றும் முஹம்மதியா ஆகியன கேட்டுக் கொண்டுள்ளன.
இந்தோனீசிய மக்கட்தொகையில் சுமார் 80 விழுக்காட்டினருக்கும் மேற்பட்டவர்கள் மாலை நேர தொழுகை, குடும்பத்தினர், நண்பர்களோடு இஃப்தார் உண்பது, குடும்பச் சந்திப்புகள் போன்ற சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம்.
ஆனால் கிருமித்தொற்று பாதிப்பைக் குறைக்கும் நோக்கில் அவ்வாறான மரபுகளைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி அங்கு 7,775 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 647 பேர் பலியாகினர்.