புத்ராஜெயா: நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மே 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் நேற்று இரவு அறிவித்தார்.
நடப்பில் உள்ள மூன்றாம் கட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு வரும் 28ஆம் தேதியோடு முடிவடையவுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கட்டுப்பாட்டு நடவடிக்கையின் காரணமாக, மதியம் 12 மணி வரை இயங்கி வந்த ஈரச் சந்தைகள், நோன்பு திறப்புக்கான உணவுப் பொருட்களை வாங்குவதற்கு ஏதுவாக இனி மதியம் 2 மணி வரையில் செயல்படும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்து
உள்ளார்.
மேலும், ரமலான் நேரத்தில் சொந்த ஊருக்குச் செல்வதற்கு யாருக்கும் அனுமதியில்லை என்றும் திரு. யாக்கோப் கூறியுள்ளார்.
பயணத் திட்டங்களைக் கொண்டிருப்பவர்கள் அதிகாரிகளிடம் பதிந்துகொள்ளும்படி நேற்று முன்தினம் அவர் கேட்டுக்கொண்டிருந்தது தொடர்பாக விளக்கம் அளித்த அவர் இவ்வாறு சொன்னார்.
தற்போது கிராமப்புறத்தில் சிக்கிக் கொண்டவர்கள் மட்டுமே பயண அனுமதிக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றார் அவர்.
இதற்கிடையே, மலேசியாவில் சுகாதார அமைச்சின் 325 அதிகாரி
கள் கிருமித்தொற்றுக்கு ஆளானதாகவும் அவர்களில் 185 பேர் பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் சுகாதாரத் துறையின் தலைமை இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்றுக்கு ஆளான சுகாதார அமைச்சின் அனைத்து அதிகாரிகளுக்கும் நோயாளிகளி
டம் இருந்து கிருமித்தொற்றவில்லை என்ற அவர், 70 விழுக்காட்டினர் வரவேற்பு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டவர்கள் மற்றும் வெளிநாடு சென்று திரும்பியவர்கள் என்றும் சொன்னார்.
இந்நிலையில், நேற்று மாண்ட இருவரில் ஒருவர் சுகாதார அமைச்சின் அதிகாரி ஆவார்.
கிருமித்தொற்றுக்கு பலியான சுகாதார அமைச்சின் மூன்றாவது அதிகாரி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக 71 பேருக்குக் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,603ஆக உயர்ந்துள்ளது. 95 பேர் பலியாகினர்.
இதுவரை மொத்தம் 3,542 பேர், அதாவது 63.2 விழுக்காட்டினர் கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

