வாஷிங்டன்: அமெரிக்காவில் குடிநுழைவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு உத்தரவில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
இதன்படி அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டு ஊழியர்களுக்கான சில பச்சை அட்டைகள் தற்காலிகமாக வழங்கப்படாது.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக உலக நாடுகளைக் காட்டிலும் அமெரிக்காவில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அதுமட்டுமல்லாது, அந்நாட்டின் பொருளியல் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக மில்லியன் கணக்கான அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை இழந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாக்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக திரு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தத் தற்காலிக குடிநுழைவு நிறுத்தம் 60 நாட்களுக்கு நடப்பில் இருக்கும் என்றும் அது நீட்டிக்கப்படக்கூடும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே, கிருமித்தொற்றைக் காரணமாக வைத்து நீண்டகாலமாக நடைமுறைப்படுத்த விரும்பிய திட்டங்களை அதிபர் டிரம்ப் தேர்தல் ஆண்டில் அமல்படுத்துவதாக அவருக்கு எதிராக விமர்
சனங்களை வைப்பவர்கள் அதிருப்திக் குரல் எழுப்பியுள்ளனர்.
பச்சை அட்டை வைத்திருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினர்களை நிரந்தரவாசி களாக்க அவர்களை அமெரிக்காவுக்கு அழைத்து வருவதை இந்தப் புதிய நடவடிக்கை தடுக்கும் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்கர்களின் வெளிநாட்டுக் கணவன் அல்லது மனைவி, 21 வயதுக்கும் குறைவான திருமணமாகாத பிள்ளைகள் ஆகியோர் இதற்கு விதிவிலக்கு.
சீன உளவுத்துறை பதற்றநிலையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, கொரோனா கிருமித்தொற்று தொடர்பாக அமெரிக்கர்களிடையே சீன உளவுத்துறை பதற்றநிலையை ஏற்படுத்தியதாக அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் முடக்கநிலை அறிவிக்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அமெரிக்கர்களின் கைபேசிகளுக்கும் சமூக ஊடகக் கணக்குகளுக்கும் பொய்ச் செய்தி கள் அனுப்பிவைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். அவற்றை சீன உளவுத்துறையினர் அனுப்பியதாக அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் கூறினர்.

