நியூயார்க்: கொரோனா கிருமித்தொற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி தனிமனித உரிமைகளை நசுக்குவது ஏற்றக்கொள்ளக்கூடியதல்ல என்று ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டெரஸ் நேற்று தெரிவித்தார்.
கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த சில நாடுகளின் அரசாங்கங்கள் வழக்கத்துக்கு மாறான பல நடவடிக்கைகளை நடை
முறைப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். நெருக்கடிநிலையைக் காரணமாகக் காட்டி சில அரசாங்கங்கள் தனிமனித உரிமைகளைப் பறிக்கக்கூடும் என்று மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
பொதுமக்களுக்கு எதிரான வன்முறை, பத்திரிகை சுதந்திரம்,
கைபேசிகள் மூலம் என்னென்ன தகவல்கள் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன எனக் கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகளில் சில அரசாங்கங்கள் ஈடுபடுவதை மனித உரிமை அமைப்புகள் சுட்டின.
"கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறி தேசியவாதம், உயர்மட்ட மக்களுக்கு எதிரான அறைகூவல், சர்வாதிகாரம், தனி
மனித உரிமைகளைப் பறித்தல் போன்ற நடவடிக்கைகளில் சில அரசாங்கங்கள் ஈடுபடக்கூடும். இவை கிருமித்தொற்றைக் கட்டுப்
படுத்த எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தொடர்பில்லாதவை. இது ஏற்றுக்கொள்ள முடியாதது," என்று திரு குட்டெரஸ் தமது அறிக்கையில் தெரிவித்தார்.
"தனிமனித சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் மிகவும் முக்கியம். சமுதாயத்தில் பொதுமக்கள் தொடர்பான அமைப்புகளுக்கும் தனியார் துறைக்கும் முக்கிய பங்குண்டு. மிரட்டல் கிருமியிடமிருந்துதான் வருகிறது, மக்களிடமிருந்து இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்," என்று திரு குட்டெரஸ் தெரிவித்தார்.
எடுக்கப்படும் நடவடிக்கைகளின் நீண்டகால விளைவுகளைப் பற்றி அரசாங்கம் நினைத்துப் பார்க்க வேண்டும் என்று உலக நாடுகளுக்கு ஐநா அறிவுறுத்தியுள்ளது.

