மணிலா முடக்கம் மே 15 வரை நீட்டிப்பு

மணிலா முடக்கம் மே 15 வரை நீட்டிப்பு

2 mins read
3d358669-7a94-4371-907c-52cae03a2813
பிலிப்பீன்சின் மணிலாவில் ஊரடங்கு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதிசெய்யும் வகையில் காவல்துறையினர் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே வேளையில் தெருக்களில் திரியும் செல்லப் பிராணிகள், தங்களுக்கு யாரும் உணவு வைக்க வரவில்லையே என ஒரு வீட்டிற்குள் எட்டிப்பார்க்க முயற்சி செய்கின்றன. படம்: ராய்ட்டர்ஸ் -

மணிலா: பிலிப்­பீன்ஸ் தலை­ந­கர் மணி­லா­வில் ஏற்­கெ­னவே நடப்­பில் உள்ள முடக்­கத்தை மே 15ஆம் தேதி வரை நீட்­டிக்க அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே உத்­த­ர­விட்டுள்­ள­தாக அவ­ரது பேச்­சா­ளர் தெரி­வித்துள்­ளார். அதன்­மூ­லம் மணி­லா­வின் முடக்­க­நிலை நான்கு வாரங்­க­ளாக நீள்­கிறது.

கொரோனா கிரு­மிப் பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த உல­கி­லேயே ஆகக் கடு­மை­யான சமூ­கத் தனிமை நட­வ­டிக்கை மேற்­கொள்­ளும் நக­ரங்­களில் ஒன்று மணிலா.

இங்கு மேற்­கொள்­ளப்­படும் நட­வ­டிக்­கை­கள் அதிக கிரு­மிப் பர­வல் காணப்­படும் மற்ற வட்­டா­ரங்­க­ளுக்­கும் நீட்­டிக்­கப்­படும் என்­றும் முன்­னேற்­றம் காணப்­படும் இடங்­களில் அவை படிப்­ப­டி­யாக விலக்­கப்­படும் என்­றும் ஹேரி ராக் எனப்­படும் அந்­தப் பேச்­சா­ளர் நேற்று செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.

மணி­லா­வின் முடக்­கத்தை நீட்­டிப்­ப­தற்­கான முடிவு எடுப்­ப­தற்­காக நேற்று முன்­தி­னம் பின்­னே­ரத்­தில் நெருக்­கடி நிலை சமா­ளிப்­புக் குழு கூட்­டத்தை அதி­பர் கூட்­டி­னார். அந்த நிகழ்­வைக் காட்­டும் நிழற்­ப­டங்­களை அர­சாங்­கத் தொலைக்­காட்சி ஒளி­ப­ரப்­பி­யது.

கொரோனா கிரு­மியை ஒழிப்­ப­தற்­கான தடுப்­பூ­சி­யைக் கண்­டு­பி­டிக்­கும் பிலிப்­பினோ குடிம­க­னுக்கு 50 மில்­லி­யன் பெசோ (US$986,000) வெகு­மதி வழங்­கப்­படும் என்ற அறி­விப்பை இந்­தக் கூட்­டத்­தில் திரு டுட்­டர்டே வெளி­யிட்­டார்.

"நாம் அனை­வ­ரும் இக்கட்டில் இருக்­கி­றோம். ஆபத்தை அதி­க­ரிக்­கக்­கூ­டிய செயல்­களில் மக்­கள் ஈடு­பட வேண்­டாம்," என்று கூறிய அதி­பர் யாரும் மெத்­த­னம் காட்­டக்­கூ­டாது என்று எச்­ச­ரித்­தார்.

மணிலா நக­ரம் மக்­கள் நெருக்­கம் மிகுந்­துள்ள பகுதி. கிட்­டத்­தட்ட 13 மில்­லி­யன் பேர் வசிக்­கும் நிலை­யில் குடி­யே­றி­களும் பல மில்­லி­யன் பேர் உள்­ள­னர். அதன் கார­ண­மாக கொரோனா கிருமி அங்கு கட்­டுக்­க­டங்­கா­மல் பரவி வரு­கிறது.

நாடு முழு­வ­தும் பாதிக்­கப்­பட்ட 6,981 பேரி­லும் 462 மர­ணங்­க­ளி­லும் மூன்­றில் இரு பகுதி மணி­லா­வில் நிகழ்ந்­தவை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒழித்துவிடுவேன்: அதிபர் கடும் எச்சரிக்கை

அர­சாங்­கம் அறி­வித்­துள்ள முடக்­க­நிலை கட்­டுப்­பா­டு­களை மக்கள் மீண்­டும் மீண்­டும் மீறுவது குறித்து எச்­ச­ரிக்கை விடுத்த பிலிப்­பீன்ஸ் அதி­பர் ரோட்­ரிகோ டுட்­டர்டே, நோய்ப்­ப­ர­வலை கட்­டுக்­குள் கொண்­டு­வர இது­போன்ற மீறல்­கள் தடுப்­ப­தா­கக் கூறி­னார்.

மேலும், சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளை­யும் நிவா­ர­ணப் பணி­களில் ஈடு­பட்­டி­ருப்­போ­ரை­யும் பாது­காத்து வரும் போலிஸ் மற்­றும் ராணு­வப் படை­யி­னர் மீது மாவோ­யிஸ்ட் கிளர்ச்­சி­யா­ளர்­கள் தாக்­கு­தல் நடத்தி வரு­வது குறித்து அதி­பர் கடு­மை­யாக விமர்­சித்­தார்.

"உங்­களை (மாவோ­யிஸ்ட்­களை) கட்­டுப்­ப­டுத்த ராணு­வச் சட்­டத்தை நான் அமல்­ப­டுத்­து­வேன். அதில் மாற்­றம் இல்லை. எனது பத­விக்­கா­லம் முடிய இன்­னும் ஈராண்­டு­கள் உள்­ளன. அதற்­குள் உங்­கள் அத்­தனை பேரின் கதை­யை­யும் முடிக்க முயற்­சிப்­பேன்," என்­றார் அவர்.