தோக்கியோ: ஜப்பானின் தென்மேற்குத் துறைமுகமான நாகசாகியில் நங்கூரமிட்டிருக்கும் இத்தாலிய சொகுசுக் கப்பலில் கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 91க்கு உயர்ந்துவிட்டதாக அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். கோஸ்டா அட்லாண்டிகா எனப்படும் அந்தக் கப்பலில் 623 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இவ்வாரம் கிருமித்தொற்று காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைத்து ஊழியர்களிடமும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதுவரை 290 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 91ஐ எட்டியது. கிருமித்தொற்று இல்லை என உறுதிசெய்யப்படுபவர்கள் விரைவில் கப்பலில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்படுவார்கள் என ஜப்பானிய சுகாதார அமைச்சர் கட்சுனோபு காத்தோ கூறியதாக கியோடோ செய்தி நிறுவனம் நேற்று தெரிவித்தது.

