வேலையிழப்பு: மிக மோசமான நிலையை நோக்கி அமெரிக்கா

வேலையிழப்பு: மிக மோசமான நிலையை நோக்கி அமெரிக்கா

1 mins read
928fb9fc-67f7-4f78-a4bf-0ce24856b7d7
வா‌ஷிங்டன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர்கள் இருவர் உரையாடிக்கொண்டுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக உல­கம் முழு­வ­தும் வேலை­யி­ழப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரும் நிலை­யில், அமெ­ரிக்­கா­வில் இந்த எண்­ணிக்கை, 1930களில் ஏற்­பட்ட மிக மோச­மான நிலையை நோக்­கிச் சென்று கொண்­டி­ருப்­ப­தாக அண்­மைய புள்­ளி­வி­வ­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

அமெ­ரிக்­கா­வில் கடந்த ஐந்து வாரங்­களில் 26 மில்­லி­யன் பேர் வேலை­யி­ழந்­தோ­ருக்­கான சலு­கையைப் பெறு­வ­தற்கு விண்­ணப்­பம் செய்­துள்­ள­தாக அர­சாங்­கம் தெரி­வித்­துள்­ளது.

இது அமெ­ரிக்­கா­வின் மிகப்­பெ­ரிய 10 நக­ரங்­க­ளின் ஒட்­டு­மொத்த மக்­கள்­தொ­கைக்­குச் சம­மா­கும்.

சென்ற வாரத்­தில் மட்­டும் 4.4 மில்­லி­யன் பேர் சலுகைக்காக விண்­ணப்­பம் செய்­துள்­ள­னர். வியா­ழக்­கி­ழமை வெளி­யான புதிய புள்­ளி­வி­வ­ரங்­க­ளின்­படி கிரு­மித்­தொற்­றால் ஏற்­பட்­டுள்ள பொரு­ளா­தார நெருக்­கடி கார­ண­மாக, ஆறு அமெ­ரிக்­கர்­களில் ஒரு­வர் வேலை­யி­ழந்­துள்­ளார். இந்நிலையில், அமெரிக்க உணவு வங்கியில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

1929ல் தொடங்கி 1930 வரை நீடித்த பொரு­ளா­தார மந்­த­நி­லை­யின் போது நான்கு அமெ­ரிக்­­கர்­களில் ஒரு­வ­ருக்கு வேலை பறி­போ­ன­தா­கத் தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்­நி­லை­யில், மோச­ம­டைந்து வரும் பொரு­ளா­தார நெருக்­க­டி­யைச் சமா­ளிக்­கும் வித­மாக, அமெ­ரிக்க நாடா­ளு­மன்­றம் கிட்­டத்­தட்ட 500 பில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் ஊக்­கு­விப்பு நிதிக்கு நேற்று முன்­தி­னம் ஒப்­பு­தல் அளித்­தது. இதேபோல், சென்ற மாதம் இரண்டு டிரில்­லி­யன் அமெ­ரிக்க டாலர் ஊக்­கு­விப்பு நிதி அறி­விக்­கப்­பட்­டது.

அமெரிக்காவில் இதுவரை 886,709 பேருக்குக் கிருமித்தொற்று பரவியுள்ளது. 50,243 பேர் பலியாகினர்.