இந்தோனீசியாவில் மேலும் 396 பேருக்குக் கிருமித்தொற்று; 31 பேர் மரணம்

இந்தோனீசியாவில் மேலும் 396 பேருக்குக் கிருமித்தொற்று; 31 பேர் மரணம்

1 mins read
316d737d-2802-4b14-b208-9cd5290a5d9f
இந்தோனீசியாவின் மேடான் நகரில் உள்ள ஒரு பேரங்காடிக் கடையில் முகக்கவசம் அணிந்தவாறு பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்கள். படம்: இபிஏ -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வில் மேலும் 396 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இதன் மூலம் அந்­நாட்­டில் மொத்­தம் 8,607 பேருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்று கார­ண­மாக இந்­தோ­னீ­சி­யா­வில் மேலும் 31 பேர் உயி­ரிந்­து­ள்ளனர். இதன் விளை­வாக இந்­தோ­னீ­சி­யா­வின் மரண எண்­ணிக்கை 70ஆக அதி­க­ரித்­துள்­ள­தாக அந்­நாட்­டின் சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­வ­தில் ஒத்­து­ழைப்­பது குறித்து இந்­தோ­னீ­சிய அதி­பர் ஜோக்கோ விடோ­டோ­வும் அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப்­பும் நேற்று முன்­தி­னம் தொலை­பேசி மூலம் கலந்­து­ரை­யா­டி­ய­தாக இந்­தோ­னீ­சிய அதி­பர் மாளிகை நேற்று தெரி­வித்­தது.

இந்­தோ­னீ­சி­யா­வி­லும் அமெ­ரிக்­கா­வி­லும் பாது­காப்பு ஆடை­கள், முகக்­க­வ­சங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான பற்­றாக்­குறை நில­வு­கிறது.

இதற்­குத் தீர்வு காண்­பது குறித்து இரு­நாட்­டுத் தலை­வர்­களும் கலந்­து­ரை­யா­டி­னர்.