அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 51,000ஐ எட்டியது

அமெரிக்காவில் மரண எண்ணிக்கை 51,000ஐ எட்டியது

2 mins read
810ab848-be74-4ede-8e11-f6decb859479
அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக 51,000 பேருக்கு மேல் இறந்­துள்ள நிலை­யி­ல், அறு­வ­ரில் ஒரு­வர் ேவலை­யின்றி தவிக்­கும் நிலை­யி­ல், அந்­நாட்­டின் சில மாநி­லங்­கள் முடக்­க­நி­லையை தளர்த்­தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுள்­ளன. படம்: ஏஎப்பி -

அட்­லாண்டா: அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக 51,000 பேருக்கு மேல் இறந்­துள்ள நிலை­யி­ல், அறு­வ­ரில் ஒரு­வர் ேவலை­யின்றி தவிக்­கும் நிலை­யி­ல், அந்­நாட்­டின் சில மாநி­லங்­கள் முடக்­க­நி­லையை தளர்த்­தும் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்டுள்­ளன.

இதில் குறிப்­பாக, ஒக்­ல­ஹோமா, ஜார்­ஜியா போன்ற மாநி­லங்­கள், மருத்­துவ நிபு­ணர்­கள் சில­ரின் அறு­வு­ரை­யை­யும் மீறி, சில வகை­யான வர்த்­த­கங்­களை அனு­ம­திக்­கும் போக்கை நேற்­றி­லி­ருந்து மேற்­கொண்டு வரு­கின்­றன.

முடக்­க­நி­லையை அவ­ச­ரப்­பட்டு தளர்த்­து­வது கிரு­மித்­தொற்று அதி­க­ரிக்­க­வும், மரண எண்­ணிக்கை அதி­க­ரிக்­க­வும் வழி­வி­டக்­கூ­டும் என பொது சுகா­தார அதி­கா­ரி­கள் எச்­ச­ரிக்கை செய்­தும், உட­லு­றுதி மையங்­கள், முடி­தி­ருத்­தும் நிலை­யங்­கள், பச்சை குத்­தும் மையங்­கள் ஆகி­ய­வற்­றோடு மற்ற பல வேலை­யி­டங்­களும் தங்­க­ளது வழக்­க­மான சேவையை வழங்க ஆரம்­பிக்க ஜார்­ஜியா ஆளு­நர் பிர­யன் கெம்ப் அனு­மதி அளித்­துள்­ளார்.

இதைத் தொடர்ந்து அமெ­ரிக்­கா­வில் முடக்­க­நி­லையை எவ்­வ­ளவு சீக்­கி­ரம் தளர்த்­த­லாம் அல்­லது நீக்­க­லாம் என்ற விவா­தம் சூடுபிடித்­துள்­ளது. ஒரு பக்­கம் கொரோனா கிரு­மித்­தொற்று பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோரை பலி வாங்­கும் நிலை­யில், மறு பக்­கம் மில்­லி­யன் கணக்­கான ஊழி­யர்­கள் வேலை­யின்றி, வரு­மா­ன­மின்றி தவிக்­கும் இரு­த­லைக் கொள்ளி நிலை­யில் அமெரிக்கா உள்­ளது.

எனி­னும், வரு­மான இழப்பு இருந்­த­போ­தும் அனு­ம­திக்­கப்­பட்ட வர்த்­த­க உரி­மை­யா­ளர்­கள் அனை­வ­ரும் தங்­கள் வர்த்­த­கங்­களை மீண்­டும் தொடங்­க­வில்லை என்று கூறு­கிறது ராய்ட்­டர்ஸ் ெசய்­தித் தக­வல்.

இதன் தொடர்­பில் பச்சை குத்­தும் நிலை­யம் ஒன்றை நடத்­தும் ஷே கேனன் என்­ப­வர், மே மாதம் மட்­டுமே தனது சேவையை மீண்­டும் தொடங்­கப் போவ­தா­க­வும் அது­வும் முன்­ப­திவு முறை­யி­லேயே தொடங்­கப்­போ­வ­தா­க­வும் கூறு­கி­றார். வழக்­க­மான சேவையை ஜூன் மாதம் அல்­லது அதற்­குப் பிந்­திய காலத்­தில்­தான் தமது நிலைய சேவை­யைத் தான் தொடங்­கப்­போ­வ­தா­க­வும் கூறு­கி­றார்.

"கிரு­மித்­தொற்று, மரண எண்­ணிக்­கையை கவ­னித்து எது சரி­யென்று எங்­க­ளுக்­குத் ேதான்­று­கி­றதோ அதன்­படி நாங்­கள் நடந்­து­கொள்­வோம்," என்று இவர் விளக்­கு­கி­றார்.

அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிருமித்­தொற்­றால் மர­ண­மடைந்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 51,000, பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 875,000 என்று தற்­பொ­ழுது உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"எங்­கள் நிலை­யம் அனை­வ­ருக்­கும் கிரு­மித்­தொற்று உள்­ளது என்ற அடிப்­ப­டை­யில் இயங்­கத் தொடங்­கும். அதன்­படி அனை­வ­ரும் பாது­காப்­பாக இருக்க நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­படும்," என்று மற்­றொரு வர்த்­த­க­ரான மாஸ்­கல் என்­ப­வர் கூறு­கி­றார்.

இதற்­கி­டையே, ஒக்­ல­ஹோமா மாநி­ல­மும் நேற்று சில வகை­யான வர்த்­த­கங்­களை மீண்­டும் இயங்க அனு­ம­தித்­துள்­ளது. மற்­றொரு மாநி­ல­மான ஃபுளோரிடா தனது கடற்­க­ரையின் சில பகு­தி­களை பொது­மக்­க­ளுக்­காக நேற்று திறந்­து­விட்­டுள்­ளது.