வூஹா­னில் கொரோனா தொற்று நோயாளிகள் அனை­வ­ரும் குண­ம­டைந்­த­னர்

வூஹா­னில் கொரோனா தொற்று நோயாளிகள் அனை­வ­ரும் குண­ம­டைந்­த­னர்

1 mins read
dea7bac6-2e75-4ccf-b441-db9f3d15c4dd
சீனாவின் வூஹான் நகரில் உள்ள மருத்துவமனையில் இருந்து கொரோனா கிருமித் தொற்றுக்கு மருத்துவம் பெற்று குணமடைந்து மகிழ்ச்சியுடன் வீடு திரும்புபவர்களுக்கு விடையளிக்கின்றனர் செவியர்களும் மருத்துவர்களும். படம்: ராய்ட்டர்ஸ் -

‌ஷங்­காய்: உல­கையே உருக்­கு­லைத்து, விடா­மல் பிடித்து பேயாட்­டம் ஆடும் கொரோனோ கிரு­மித்தொற்­றின் தொடக்க இட­மா­கக் கூறப்­படும் சீனா­வின் வூஹான் நக­ரில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் அனை­வ­ரும் முழு­மை­யா­கக் குண­ம­டைந்து வீடு திரும்­பி­விட்­ட­னர் என்று அந்­நாடு அறி­வித்­துள்­ளது. புதிய கொரோனா கிருமி முதன்­மு­த­லில் வூஹா­னில் உள்ள ஓர் ஈரச்­சந்­தை­யில் கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் உரு­வா­னது என்று நம்­பப்­ப­டு­கிறது. அது வெகு­வி­ரை­வில் உல­கம் முழு­வ­தும் பரவி ஏறக்­கு­றைய 2.83 மில்­லி­யன் பேருக்­குத் தொற்­றி­யது.

இது­வ­ரை­யி­லும் 1,97,872 பேரின் உயிர்­க­ளைக் குடித்­துள்­ளது. வூஹா­னில் கொரோனா கிருமி துடைத்­தொ­ழிக்­கப்­பட்­டது குறித்து பேசிய சீனா­வின் தேசிய சுகா­தார ஆணை­யத்­தின் பேச்­சா­ளர் மி ஃபெங், நாடு முழு­தும் உள்ள சுகா­தா­ரத்­துறை ஊழி­யர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­துக்­கொண்­டார். சீனா­வில் ஏற்­பட்ட கொரோனா கிரு­மித்தொற்றுப் பாதிப்­புச் சம்­ப­வங்­களில் 56 விழுக்­காடு வூஹா­னில் ஏற்­பட்­டது. கொரோனா கிருமி இங்கு மட்­டும் 3,869 பேரின் உயி­ரைக் குடித்­துள்­ளது.