கிருமிப் பரவல் நிறுத்தப்பட்டது: நியூசிலாந்து பிரதமர்

கிருமிப் பரவல் நிறுத்தப்பட்டது: நியூசிலாந்து பிரதமர்

1 mins read

ஆக்­லாந்து: கொரோனா கிரு­மித்­தொற்­றின் சமூக பர­வலை வெற்­றி­க­ர­மா­கக் தடுத்­துள்­ள­தாக நியூ­சி­லாந்து அறி­வித்­துள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக அங்­குக் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­

ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை குறைந்­து­கொண்டே வந்த நிலை­யில், ஞாயி­றன்று ஒரு­வர் மட்­டுமே பாதிக்­கப்­பட்­டார்.

இதை­ய­டுத்து பேசிய நியூ­சி­லாந்து பிர­த­மர் ஜசிந்தா ஆர்­டெர்ன் தற்­போ­தைக்கு கிரு­மிப் பர­வல் தடுக்­கப்­பட்டு விட்­ட­தா­கக் கூறி­னார்.

நாம் இப்­ப­டியே தொடர வேண்­டு­மா­னால், தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்கவேண்­டி­யது மிக­வும் அவ­சி­யம் என்­றும் அவர் சொன்­னார்.

ஆனால் இதற்­குக் கிரு­மித்­தொற்று முழு­மை­யாக முடி­வுக்கு வந்­து­விட்­ட­தாக அர்த்­த­மல்ல என்று அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

பெரும்­பா­லான மக்­கள் எல்லா நேரங்­க­ளி­லும் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் மற்­றும் அனைத்து சமூக தொடர்­பு­க­ளை­யும் தவிர்க்க வேண்­டும் என்று அறி­வு­றுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், நியூ­சி­லாந்­தில் இன்று முதல், சில அத்­தி­யா­வ­சி­ய­மற்ற வர்த்­தக நட­வ­டிக்­கை­கள் மற்­றும் சுகா­தார, கல்வி நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் தொடங்­க­வுள்­ளன.