ஜகார்த்தா: கிருமித்தொற்றால் இந்தோனீசியாவில் மேலும் 2,200 பேர் மாண்டிருப்பார்கள் என்று ராய்ட்டர்ஸ் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 2,200க்கும் மேற்பட்ட இந்தோனீசியர்கள் கொரோனா அறிகுறிகளுடன் உயிரிழந்துள்ளதாகவும் ஆனால் அவர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்களாகப் பதிவு செய்யப்படவில்லை என்றும் இந்தோனீசியாவின் 16 மாநிலங்களின் தரவுகளை ஆய்வு செய்துள்ள ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
இந்தோனீசியாவில் கிருமித்தொற்றுக்கு 765 பேர் மாண்டதாக அதிகாரபூர்வ எண்ணிக்கை கூறுகிறது என்றாலும் அந்த எண்
ணிக்கையை மேலும் அதிகமாக இருக்கும் என்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுவதாக மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

