பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் வரும் 18ஆம் தேதி நடைபெறவுள்ள ஒருநாள் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்னர், அனைத்து உறுப்பினர்களும் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
"நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு நடப்பில் இருப்பதால், அனைத்து உறுப்பினர்களும் மே 14 முதல் 15 வரை நாடாளுமன்றத்தில் கிருமித்தொற்றுக்கான பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்," என்று உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் செயலாளர் ரிதுவான் ரஹ்மத் குறிப்பிட்டுள்ளார்.

