மலேசியாவில் சில கட்டுப்பாடுகளுக்குத் தளர்வு

மலேசியாவில் சில கட்டுப்பாடுகளுக்குத் தளர்வு

1 mins read
d2a42cb3-4cf3-46d2-a5f1-4b44741583f3
மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு ஆணை நடப்பில் இருக்கும் இவ்வேளையில் பகுதி ஊழியர்களுடன் இயங்கி வரும் பல பொருளியல் பிரிவுகள், நாளை (ஏப்ரல் 29) முதல் கூடுதலான ஊழியர்களுடன் முழு திறனுடன் செயல்பட அனுமதிக்கப்படும் என்று மலேசியாவின் அனைத்துலக வர்த்தக, தொழில்துறை அமைச்சர் அஸ்மின் அலி தெரிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சி­யா­வில் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வின் நான்­காம் கட்­டம் நேற்று தொடங்­கிய நிலை­யில், அங்கு சில கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன.

இதற்கு முன்பு அத்­தி­யா­வ­சி­யப் பொருட்­களை வாங்­கு­வ­தற்கு ஒரு குடும்­பத்­தி­லி­ருந்து ஒரு­வர் மட்­டுமே வெளியே செல்­ல­மு­டி­யும் என்ற கட்­டுப்­பாடு தளர்த்­தப்­பட்டு, ஒரு குடும்­பத்­தி­லி­ருந்து இரு­வர் செல்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. அவர்­கள் ஒரே வீட்­டில் தங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளா­க­ இருக்க வேண்­டி­யது அவ­சி­யம்.

அதே போல் வீட்­டில் இருந்து 10 கிலோ­மீட்­டர் தூரத்­திற்கு மட்­டும் தான் செல்­ல­வேண்­டும் என்ற கட்­டுப்­பா­டும் தளர்த்­தப்­பட்டு

உள்­ள­தாகத் தற்­காப்பு அமைச்­சர் இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, பொரு­ளி­யல் நட­வ­டிக்­கை­கள் முழு­வீச்­சில் தொடங்­கிய 2 அல்­லது 4 வாரங்­க­ளுக்­குப் பிறகு பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­ப­டு­வ­தற்குப் பரிந்­து­ரைக்­கப்­படும் என்று கல்வி அமைச்சு கூறி­யுள்­ளது. பல தொழில் நிறு­வ­னங்­கள் செயல்­ப­டு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ள­தால், பாலர் பரா­ம­ரிப்பு மையங்­கள் திறக்­கப்­ப­டு­வ­தற்­கான பாது­காப்பு விதி­மு­றை­கள் குறித்து இன்று பரி­சீலிக்கப்­படும் என்­றும் அவர் சொன்­னார்.

மலே­சி­யா­வில் நேற்று மேலும் 94 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. அவர்­களில் 72 பேர் இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து திரும்­பி­ய­வர்­கள்.