ஜெர்மானிய மாட்டிறைச்சி கூடத்தில் 200 ரோமானியர்களுக்குத் தொற்று

1 mins read
c6971d07-df50-4674-8bc0-6265df4cf68a
ஜெர்மானிய மாட்டிறைச்சிக் கூடத்தில் 200 ரோமானியர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரோமானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. படம்: ஏஎப்பி -

பெர்லின்: ஜெர்மானிய மாட்டிறைச்சிக் கூடத்தில் 200 ரோமானியர்களுக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ரோமானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

தென்மேற்கு ஜெர்மனியின் பிர்கின்ஃபீல்ட் மாட்டிறைச்சிக் கூடத்தில் பணிபுரிந்த 300 ஊழியர்களுக்குக் கிருமித்தொற்று உள்ளதாகவும் அவர்கள் தனிமைப்படுத்தபட்டுவுள்ளதாகவும் கூறும் ஜெர்மானிய அதிகாரிகள் அவர்களில் பெரும்பாலானவர்கள் ரோமானியர்கள் என்றும் கூறினர்.