பிரிட்டனுக்குள் நுழைவோருக்கு புதிய கட்டுப்பாடு

லண்டன்: பிரிட்டனுக்கு வருபவர்கள் தங்களை தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு ஜூன் 8ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வரும். பயணிகள் தங்களுடைய தங்குமிட விவரங்களை அரசாங்கத்திடம் தெரிவிப்பது கட்டாய மாகும்.

திடீர் சோதனைகள் நடத்தப் பட்டு விதிமுறையை மீறியவருக்கு ஆயிரம் பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாடு, எல்லைகளுக்கு இடையே கிருமிப் பரவலைத் தடுக்கும் முயற்சி என்று உள்துறை அமைச்சர் பிரிதி பட்டேல் விளக்கினார்.

புதிய கட்டுப்பாட்டிலிருந்து லாரி ஓட்டுநர்கள், பண்ணை ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆகியோருக்கு விலக்கு அளிக்கப்படும் என்றார் அவர்.

அயர்லாந்திலிருந்து வரு வோருக்கும் விதிமுறையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் அவர் சொன்னார்.

ஆனால் நாடு முழுவதும் எல்லைகள் முழுமையாக மூடப்படவில்லை என்று பிரிதி பட்டேல் தெரிவித்தார்.

இதற்கிடையே பயணிகள் யாருக்காவது தங்குமிடம் கிடைப்பதில் பிரச்சினை இருந்தால் அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ள இடங்களில் சொந்த செலவில் தங்கலாம்,” என்று எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர் பால் லிங்கன் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!