மலேசியாவில் புதிதாக 187 பேருக்கு கிருமித்தொற்று

மலேசியாவில் புதிதாக 187 பேருக்கு கிருமித்தொற்று

1 mins read
a7c456da-3c1c-492b-bab6-87c0d6269056
மலேசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,604ஆக உயர்ந்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ் -

கோலாலம்பூர்: மலேசியாவில் நேற்று புதிதாக 187 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் குடிநுழைவுத் தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களையும் சேர்த்து, அந்நாட்டில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,604ஆக உயர்ந்துள்ளது. அந்நாட்டு சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட தகவலின்படி, புதிதாக மரணம் எதுவும் பதிவாகவில்லை. மலேசியாவில் கிருமித்தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 115ஆக உள்ளது.