ஸ்ரீநகர்: காஷ்மீரின் கதுவா மாவட்டம் ஹிரா நகர் பகுதியில் உள்ள மன்யாரி கிராமத்துக்குள் இரு நாட்களுக்கு முன்னர் புறா ஒன்று பறந்து வந்துள்ளது. பாகிஸ்தான் பகுதியில் இருந்து வந்ததால், சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் புறாவைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
புறாவை போலிசாரும் பாதுகாப்பு படையினரும் சோதித்தபோது அதன் ஒரு காலில் மோதிரம் போன்ற வளையம் மாட்டப்பட்டு அதில் ரகசியக் குறியீடாக சில எண்களும் இருந்தன. இந்திய பகுதிகளை உளவு பார்க்கவோ வேறு ஏதேனும் சங்கேத வார்த்தைகளை தெரிவிப்பதற்கோ பாகிஸ்தானிலிருந்து புறா அனுப்பப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.