மட்ரிட்: ஸ்பெயினில் அடுத்த வாரத்திலிருந்து கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகள் மேலும் தளர்த்தப்படவுள்ளன. மக்கள்தொகையில் 70 விழுக்காட்டினர் உணவகங்கள், நீச்சல்குளங்கள், கடைத்தொகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்படும்.
இந்நிலையில், ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 182 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கிருமித்தொற்று பாதிப்பால் 38 பேர் உயிரிழந்தனர்.