பெய்ஜிங்: ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வர சீனா நடவடிக்கை எடுத்து வருவதற்கு உலக அளவில் பல்வேறு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக் கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹாங்காங்கிற்கு அளித்து வந்த சிறப்புச் சலுகைகளை நீக்குவதாக அறிவித்து உள்ளார்.
ஹாங்காங் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் டிரம்ப், “ஹாங்காங்கிற்கு என்று ஒரு பெருமை உள்ளது. அதைக் குலைக்கும் வகையில் சீனா நடந்து கொள்கிறது. இது ஹாங்காங் மக்களுக்கு செய்யும் இழுக்கு, சீன மக்களுக்கு செய்யும் இழுக்கு. ஏன், உலக மக்களுக்கே செய்யும் இழுக்கு” என்றார். மேலும் சீனா, அமெரிக்கா உறவில் மிகப்பெரும் தாக் கத்தை ஏற்படுத்தும் விதமாக, சீன ராணுவத்துடன் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கும் அமெரிக்காவில் பயிலும் அந்நாட்டு மாணவர்களுக்குத் தடை விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார் டிரம்ப்.
உளவு பார்த்தல், அறிவுசார் சொத்துரிமை திருட்டு போன்றவற்றைக் கட்டுப்படுத் தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே போன்று, சீனாவுடன் ஆராய்ச்சி
யாளர்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளும் விசாவும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஹாங்காங் சிறப்பு தகுதியை நீக்குவது, உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுவது ஆகிய அமெரிக்காவின் நடவடிக்கை தற்கொலைக்கு சமம் என்று விமர்சித்து உள்ளது சீன ஊடகம். இந்நிலையில், ஹாங்காங் தொடர்பான சீனாவின் நடவடிக்கைக்கு வடகொரியா ஆதரவு தெரிவித்துள்ளது.