முகைதீன்: மகாதீருக்கு எதிரான நடவடிக்கை சரியானது

முகைதீன்: மகாதீருக்கு எதிரான நடவடிக்கை சரியானது

1 mins read
38e120f7-4bcd-404e-8883-804bf3b9a6db
முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது மற்­றும் நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் சட்டதிட்டங்களை மீறி­ய­தா­க­வும் அதற்­காக அவர்­களை பெர்­சத்து கட்­சி­யில் இருந்து விலக்குவது சரி­யென்­றும் பிர­த­மர் முகை­தீன் யாசின் கூறி­யுள்­ளார். படம்: பெர்னாமா -

கோலா­லம்­பூர்: முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது மற்­றும் நான்கு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் கட்­சி­யின் சட்டதிட்டங்களை மீறி­ய­தா­க­வும் அதற்­காக அவர்­களை பெர்­சத்து கட்­சி­யில் இருந்து விலக்குவது சரி­யென்­றும் பிர­த­மர் முகை­தீன் யாசின் கூறி­யுள்­ளார்.

"அவர்­கள் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­ட­வில்லை, அவர்­க­ளின் நட­வ­டிக்­கை­கள் கட்­சி­யின் சட்டதிட்டங்களுக்கு எதி­ரா­னது என்­ப­தால் அவர்­க­ள் உறுப்­பி­யத்தை இழந்­து­விட்­ட­னர்," என்று பெர்­சத்து கட்­சி­யின் தலை­வ­ரு­மான முகை­தீன் கூறி­னார்.

"பக்­கத்­தான் ஹரப்­பா­னு­டன் கட்சி முடிவு தொடர்ந்து செயல்­பட வேண்­டா­மென்று முடி­வெ­டுத்­துள்ள போதும் மகா­தீ­ரும் மற்­றும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு பக்­கத்­தான் ஹரப்­பா­னு­டன் இணைந்து செயல்­பட விரும்­பு­கின்­ற­னர்.

"அது­தான் முடி­வென்­றால், மகா­தீ­ருக்கு என்­னு­டைய வாழ்த்­து­கள்," என்­றார்.

மே 18ஆம் தேதி­யன்று நடந்த நாடா­ளு­மன்ற கூட்­டத்­தில் மகா­தீ­ரும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் பெர்­சத்­து­வின் எதிர்க்­கட்­சி­யோடு அமர்ந்­தி­ருந்­த­தால் அவர்­கள் கட்சி உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து நீக்­கப்­பட்­ட­தாக மே 29ஆம் தேதி கடி­தம் அனுப்­பப்­பட்­டது.