உக்ரேனில் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் முடக்க உத்தரவுகள் நடப்பில் உள்ளது. இந்நிலையில், உணவகங்களைத் திறப்பதற்கான அனுமதி உள்ளிட்ட அரசாங்க ஆதரவு கோரி தலைநகர் கீவ்வில் உள்ள அமைச்சர்கள் தலைமையகத்திற்கு அருகில், தொழில் முனைவோர் மற்றும் உணவு சேவை ஊழியர்கள் பேரணி நடத்தினர். உக்ரேனில் 24,012 பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 718 பேர் மாண்டனர். படம்: ராய்ட்டர்ஸ்
உக்ரேனில் உணவகங்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்த கோரி பேரணி
1 mins read
உக்ரேனில் உணவகக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தக்கோரி உணவு சார்ந்த துறைகளில் பணிபுரியும் இவர்கள் சமையல் பாத்திரங்கள், சாப்பாட்டுத் தட்டு, கரண்டி ஆகியவற்றுடன் போராட்டத்தில் குதித்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

