போதைப்பொருள் கடத்தலுக்காக ஆஸ்திரேலியர் ஒருவருக்கு சீனா மரண தண்டனை அளித்துள்ளது. சீன நீதிமன்றத்தின் இந்த முடிவால் அந்நாட்டுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான பதற்றநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மரண தண்டனைக்கு எதிரான நிலைப்பாட்டைக்கொண்டுள்ள ஆஸ்திரேலியா, சீனாவின் தீர்ப்பு குறித்து "ஆழ்ந்த கவலையுடன்" இருப்பதாக ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
'காமூ ஜியேலாசிபி' என்று சீனாவில் அழைக்கப்படும் இந்நபருக்கு குவாங்சோ நீதிமன்றம் இத்தண்டனையை புதன்கிழமை (ஜூன் 10ஆம் தேதி) விதித்தது.