ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிப்படைந்திருப்போர் எண்ணிக்கை 40,000ஐ கடந்துள்ளது. கிருமித்தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள புதிய வட்டாரங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தோரை அடையாளம் கண்டு தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தோனீசியாவில் மேலும் 1,106 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்நாட்டில் மொத்தம் 40,400 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கிருமித்தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்தனர்.
இந்நோயின் காரணமாக இந்தோனீசியாவில் 2,231 பேர் மாண்டுவிட்டனர்.