ஆக்லாந்து: நியூசிலாந்தில் போலிஸ் அதிகாரி ஒருவர் நேற்று சுற்றுக் கொல்லப்பட்டார். பணியில் இருக்கும்போது போலிஸ் அதிகாரி ஒருவர் நியூசிலாந்தில் கொல்லப்படுவது கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை.
ஆக்லாந்து நகரில் வழக்கமான போக்குவரத்துக் கட்டுபாட்டுப் பணியில் ஈடுபட்டு இருந்த போலிஸ் அதிகாரிகளை மர்ம மனிதர்கள் கண்மூடித்தனமாக சுட்டுவிட்டுத் தப்பினர். ஒருவர் மாண்டார், மற்றவர் படுகாயமடைந்தார்.
பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. சம்பவம் நிகழ்ந்த நான்கு மணி நேரம் கழித்து வீடு ஒன்றை சுற்றிவளைத்த போலிஸ் அதிகாரிகள் அங்கிருந்த இருவரைக் கைது செய்ததாக ஒரு தகவலும் சுட்டவர்கள் தேடப்பட்டு வருவதாக மற்றொரு தகவலும் தெரி
வித்தன.
மேற்கு ஆக்லாந்தில் காலை 10.30 மணியளவில் சம்பவம் நிகழ்ந்தது.
இதற்கு முன்னர் கடந்த 2009ஆம் ஆண்டு நேப்பியர் நகரில் உள்ள ஒரு வீட்டைச் சோதனையிடுவதற்காக அதற்கான உத்தரவுடன் சென்ற மூத்த போலிஸ் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டார். அதன் பிறகு நேற்றுதான் அப்படி ஒரு கொலை நிகழ்ந்தது.
சம்பவத்தை செய்தியாளர்களிடம் விளக்கிய காவல்துறை ஆணையாளர் ஆண்ட்ரு காஸ்டர், கொலைக் கான நோக்கம் விசாரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதற்கிடையே, உயிரிழந்த போலிஸ் அதிகாரியின் குடும்பத்தினருக்கு பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளார். மேலும் போலிசாரின் கடைமை களை அவர் பாராட்டினார்.

