மலேசிய ஆட்கடத்தல் கும்பலுடன் போலிஸ், ராணுவ அதிகாரிகள் தொடர்பு

மலேசிய ஆட்கடத்தல் கும்பலுடன் போலிஸ், ராணுவ அதிகாரிகள் தொடர்பு

1 mins read
cb6da5f0-5be8-4075-9c3c-9dfc8075f9eb
மலே­சிய தலைமை போலிஸ் அதி­காரி அப்­துல் ஹமித் படோர் . படம்: சைனா பிரஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சிய போலிஸ் மற்­றும் ஆயு­தப் படை­யைச் சேர்ந்த பத்­துக்­கும் மேற்­பட்ட அதி­கா­ரி­கள் ஆட்­க­டத்­தல் கும்­ப­லு­டன் தொடர்­பில் இருப்­ப­தாக அடை­யா­ளம் காணப்­பட்­டுள்­ள­னர் என்று மலே­சிய தலைமை போலிஸ் அதி­காரி அப்­துல் ஹமித் படோர் தெரி­வித்துள்­ளார். அண்­மை­யில் அம­லாக்­கப் பிரி­வைச் சேர்ந்த 18 அதி­கா­ரி­கள் கைது செய்­யப்­பட்­ட­தைத் தொடர்ந்து விரி­வான தேடு­தல் வேட்டை நடத்­தப்­பட்­ட­தா­க­வும் அடை­யா­ளம் காணப்­பட்­டோர் விரை­வில் பிடி­ப­டு­வார்­கள் என்­றும் அவர் கூறியுள்ளார்.

இது தொடர்­பான தக­வல்­கள் உள்­துறை அமைச்­சுக்­கும் ஆயு­தப் படைத் தலை­வ­ருக்­கும் தெரி­விக்­கப்­பட்டு உள்­ள­தெனக் கூறிய அவர், குற்­றம் புரிந்த அதி­கா­ரி­கள் அதற்­கான தண்­ட­னையை அனு­ப­வித்தே தீர­வேண்­டும் என்­றார்.