ரியோ டி ஜெனிரோ: தென் அமெரிக்காவில் உள்ள பிரேசில் நாட்டில் கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஏறக்குறைய 50,000 பேர் பலியாகிவிட்டனர். மொத்தம் 1,067,579 பேரைக் கிருமி தொற்றி இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகில் நேற்றுக் காலை நிலவரப்படி மொத்தம் 8,931,812 பேரைக் கிருமி தொற்றி இருந்தது. 467,011 பேர் பலியாயினர். குண மடைந்தோர் 4,749,544 பேர்.

