வெலிங்டன்: கொவிட்-19க்கு எதிரான போரில் முழு வெற்றிகண்ட நியூசிலாந்தில் நேற்று புதிதாக இருவருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு கூறியது.
கிருமி தொற்றிய இருவரும் வெளியில் இருந்து நாட்டுக்குள் வந்தவர்கள். இவர்களையும் சேர்த்து மொத்தம் 1,161 பேரைக் கிருமி தொற்றி உள்ளது.
நியூசிலாந்து சனிக்கிழமை மட்டும் 5,950 பரிசோதனைகளை நடத்தியது. அந்த நாட்டில் கிருமித்தொற்றுக்கு இதுவரை 22 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
மொத்தம் 341,117 பரிசோதனைகள் நடத்தப்பட்டு இருக்கின்றன.

