இந்தியா-சீனா பதற்றம் தீர அமெரிக்கா உதவி

இந்தியா-சீனா பதற்றம் தீர அமெரிக்கா உதவி

2 mins read
d72918d2-a035-49e4-958a-6a1e6b8e0e80
இந்திய- சீன எல்லையில் மோதல் நடந்த கல்­வான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­க்குச் செல்லும் நெடுஞ்சாலை. படம்: ஊடகம் -

வாஷிங்­டன்: இந்­தி­யா­வும் சீனா­வும் எல்­லைப் பிரச்­சி­னைக்­குத் தீர்வு காண உதவ இரு தரப்­பு­க­ளோ­டும் அமெ­ரிக்கா பேச்­சு­வா­ரத்தை நடத்தி வரு­வ­தாக அந்த நாட்­டின் அதி­பர் டோனல்ட் டிரம்ப் தெரி­வித்­தார்.

"எல்­லை­யில் சூழ்­நிலை கடு­மை­யா­கத்­தான் இருக்­கிறது. இந்­தி­யா­வு­டன் பேசு­கி­றோம். சீனா­வு­டன் பேசு­கி­றோம். இரு நாடு­க­ளுக்­கும் இடை­யில் பிரச்­சினை பெரி­ய­தாக இருக்­கிறது," என்று வெள்ளை மாளி­கை­யில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசியபோது அதி­பர் தெரி­வித்­தார்.

"இரு நாடு­க­ளி­டையே நல்ல சூழல் நில­வ­வில்லை. என்ன நடக்­கிறது என்று பார்க்­க­லாம்.

"எல்­லைப் பிரச்­சி­னை­யைத் தீர்க்­க­வும், பதற்­றத்­தைத் தணிக்­கவும் சீனா, இந்­தி­யா­வுக்கு உத­வு­வோம். அதற்­காக அமெ­ரிக்கா பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­கிறது," என்று அதி­பர் குறிப்­பிட்­டார்.

கிழக்கு லடாக்­கில் உள்ள கல்­வான் பள்­ளத்­தாக்­குப் பகு­தி­யில் கடந்த திங்­கள்­கி­ழமை இந்­திய-சீன ராணு­வங்களுக்கு இடையே நடந்த கடு­ம் மோத­லில் 20 இந்­திய ராணுவ வீரர்­கள் மர­ணம் அடைந்­த­னர்.

சீன ராணுவ உயி­ரி­ழப்பு பற்­றிய செய்தி எது­வும் தெரி­ய­வில்லை. இருந்­தா­லும் சீன ராணு­வத் தரப்­பி­லும் கணி­ச­மான உயிர் சேதம் இருக்­க­லாம் என்று அனு­மா­னிக்­கப்­ப­டு­கிறது.

எல்­லை­யில் ஏற்­பட்­டுள்ள பதற்­றத்­தைத் தணிக்க சீன, இந்­திய ராணுவ உயர் அதி­கா­ரி­கள் தலை­மை­யில் பேச்­சு­வார்த்தை நடந்து வரு­கிறது. இந்­நி­லை­யில் அமெ­ரிக்க அதி­ப­ரின் தக­வல் வெளி­யாகி உள்­ளது. சீனா­வு­ட­னான எல்­லைப் பிரச்­சி­னை­யில் இந்­தி­யா­வுக்கு ஆத­ர­வா­க அமெ­ரிக்கா தொடர்ந்து கருத்து தெரி­வித்து வரு­கிறது. கொரோனா கிரு­மிப் பர­வல் சிக்­க­லில் நாடு­கள் இருக்­கும்­போது, இந்­தி­யா­வி­டம் மட்­டு­மல்­லா­மல் பக்­கத்து நாடு­க­ளி­ட­மும் எல்­லைப் பிரச்­சி­னையை சீனா தொடர்ந்து உரு­வாக்கி வரு­கிறது என்று அமெ­ரிக்கா குற்­றம் சாட்டி வரு­கிறது.

ஐரோப்பா மற்­றும் சீனா­வுக்­கான 2020 ஆம் ஆண்டு சவால்­கள் என்ற மாநாட்­டில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை உரை­யாற்­றிய அமெ­ரிக்க வெளி­யு­றவு அமைச்­சர் மைக் பொம்­பியோ, சீனாவை கடு­மை­யா­கச் சாடி­னார். "மிகப்­பெ­ரிய ஜன­நா­யக நாடான இந்­தி­யா­வி­டம் சீனா­வின் மக்­கள் சுதந்­திர ராணு­வம் தொடர்ந்து எல்­லைப் பதற்­றத்தை உரு­வாக்கி வரு­கிறது. அது­மட்­டு­மல்­லா­மல் தென் சீனக் கடல் பகு­தி­யி­லும் சட்ட விரோ­த­மாக பல பகு­தி­களை சீனா கோரி வரு­கிறது.

அங்­குள்ள உயிர்­நா­டி­யான கடல் வழி­க­ளுக்கு சீனா மிரட்­டலை ஏற்­ப­டுத்­து­கிறது,'' என்று அமெ­ரிக்க அமைச்­சர் பேசி­னார்.