கருணா அம்மான்: இரண்டாயிரம் ராணுவ வீரர்களை கொன்றேன்

கருணா அம்மான்: இரண்டாயிரம் ராணுவ வீரர்களை கொன்றேன்

2 mins read
55b115b9-58d6-494c-b76b-e150b40d7a90
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவுடன் விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் துணைத் தலைவர் கருணா அம்மான் (வலது). கோப்பு படம் -

கொழும்பு: விடு­தலைப் புலி­கள் இயக்­கத்­தில் இருந்­த­போது ராணுவ வீரர்­க­ளைக் கொன்­ற­தாகக் கூறிய அதன் முன்­னாள் துணைத் தலை­வர் கருணா அம்­மானை வாக்­கு

­மூ­லம் அளிக்க முன்­னி­லை­யா­கு­மாறு இலங்கை போலிஸ் அழைப்­பானை அனுப்பி­யுள்­ளது.

விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் கிழக்­குத் தள­ப­தி­யாக இருந்­த­வர் கருணா அம்­மான் எனப்­ப­டு­கிற விநா­யகமூர்த்தி முர­ளி­த­ரன். கடந்த 2004ஆம் ஆண்டு விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பி­லி­ருந்து கருணா அம்­மான் வில­கி­விட்­டார்.

அதன் பிறகு 2008ஆம் ஆண்டு கிழக்கு மாகா­ணத்­தில் தமிழ் ஐக்­கிய சுதந்­திரா முன்­னணி எனும் கட்­சி­யைத் தொடங்­கிய கருணா அம்­மான், அதில் போட்­டி­யிட்டு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­னார்.

அதன்­பின் மகிந்த ராஜ­பக்­சே­வின் இலங்கை சுதந்­திரா கட்­சி­யோடு கருணா அம்­மான் கூட்­டணி அமைத்­தார்.

தற்­போது இலங்­கை­யில் வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடை­பெ­ற­வுள்ள நடாாளு­மன்­றத் தேர்­த­லுக்­கான பிர­சா­ரத்­தில் அவர் ஈடு­பட்டு வரு­கி­றார்.

இந்­நி­லை­யில், கடந்த வாரம் இலங்­கை­யின் வடக்­குப் பகு­தி­யில் நடந்த பிரசா­ரக் கூட்­டம் ஒன்­றில் பேசிய கருணா அம்­மான், "நான் கொரோனா கிரு­மி­யை­விட ஆபத்­தா­ன­வன். கொரோனா கிரு­மி­யால் இலங்­கை­யில் இது­வரை 9 பேர்­தான் இறந்­துள்­ளார்­கள்.

"ஆனால் விடு­த­லைப்­பு­லி­கள் அமைப்­பில் நான் இருந்­த­போது, ஆனையிறவில், ஒரு­நாள் இர­வில் 2 ஆயி­ரம் முதல் 3 ஆயி­ரம் இலங்கை ராணுவ வீரர்­க­ளைக் கொன்­றி­ருக்­கி­றேன். கிளி­நொச்­சி­யில் ஆயி­ரக்­க­ணக்­கான ராணு­வத்­தி­னரை கொன்­றுள்­ளோம்," எனத் தெரி­வித்­தார்

அண்­மை­யில் கருணா அம்­மா­னை விமர்­சித்த கரத்­தீவு உள்ளாட்சி அமைப்­பின் தலை­வர், கொரோ­னா­வைக் காட்­டி­லும் கருணா அம்­மான் ஆபத்­தா­ன­வர் என்று தெரி­வித்­தி­ருந்­தார்.

அதற்கு பதி­லடி தரும்­வி­த­மாக பேசிய கருணா அம்­மா­னின் இந்த கூற்று இலங்­கை­யில் பெரும் விவா­தத்­தை­யும் சர்ச்­சை­யை­யும் கிளப்­பி­யுள்­ளது.

இதை­ய­டுத்து, கருணா அம்­மான் பேசி­யது குறித்து குற்ற விசா­ரணை நடத்தி அறிக்கை தாக்­கல் செய்ய காவல்­துறை தலை­வர் சந்­தனா விக்­ர­ம­சிங்கே உத்­த­ர­விட்­டுள்­ளார் என்று பாது­காப்­பு அமைச்­ச­கம் தெரி­வி்­த்­துள்­ளது.

ஆனால், கருணா பேச்­சால் சிக்­கலை எதிர்­நோக்­கி­யுள்ள ராஜ­பக்சே கட்சி, தங்­கள் கூட்­ட­ணி­யில் கருணா கட்சி இல்லை என்று மறுத்­துள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மேலும், கரு­ணா­வின் பேச்­சுக்கு முன்­னாள் பாது­காப்­புத்­துறை அமைச்­ச­ரும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் துணைப் பொதுச்­செ­ய­லா­ள­ரு­மான விஜ­ய­வர்த்­தனே கடும் கண்­ட­னம் தெரி­வித்­துள்­ளார்.