சுகாதாரச் சேவை பாதிப்பால் பெண்கள், குழந்தைகளுக்கு ஆபத்து

லண்டன்: கிருமிப் பரவல் காரணமாக வழக்கமான சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று உலக வங்கியின் உலகளாவிய சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

குழந்தைகளுக்குத் தேவையான சுகாதாரப் பராமரிப்புச் சேவை, பெண்களுக்கான மகப்பேறு சேவை உட்பட பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கியின் உலகளாவிய நிதிச் சேவையின் தலைவர் மோனிக் விலெடர் கூறினார்.

தடுப்பூசி போடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்திருப்பது கவலையளிக்கிறது.

மருத்துவ உதவி இல்லாமல் பெண்கள் குழந்தையை ஈன்றெடுக்கின்றனர். உயிர்க்காக்கும் மருந்துகளின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது என்றார் அவர். கிருமித் தொற்றால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து 36 நாடுகளில் உள்ள ஊழியர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனாவுக்கு எதிரான கட்டுப்பாடுகளால் 87 விழுக்காடு வழக்கமான சுகாதாரச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதை ஆய்வின் முடிவுகள் காட்டுகின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!