கொரோனா: திணறுகிறது விக்டோரியா

கொரோனா: திணறுகிறது விக்டோரியா

1 mins read
06aea1f0-c060-465b-9906-47a69dc49a34
படம்: ஏஎப்பி -

மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவில் இரண்டாவது ஆகப் பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ள விக்டோரியா மாநிலத்தில் நேற்று 41 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த வாரம் அன்றாடம் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் இது இரண்டு மடங்காகும். ஆஸ்திரேலியாவின் மற்ற பகுதிகளில் சமூக இடைவெளி நடைமுறைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் வேளையில், கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்த விக்டோரியா திணறி வருகிறது. அந்த மாநிலத்தில் கடந்த 11 நாட்களாக இரட்டை இலக்க எண்ணில் கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. அவற்றில் பெரும்பாலும் மெல்பர்ன் நகருடன் தொடர்புடையவை.