பாரிஸ்: கிருமித்தொற்று காரணமாக முடக்கப்பட்டிருந்த பிரான்சில், மூன்று மாத தாமதத்திற்குப் பிறகு நகராட்சித் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
பிரான்சில் 2022ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போதைய அதிபர் இம்மானுவேல் மெக்ரோனுக்கு இது இடைக்கால சோதனை என்றுதான் சொல்ல வேண்டும். இத்தேர்தலில் பல இடங்களைக் கைப்பற்றி பாரிஸ் உட்பட பிரான்ஸ் முழுவதிலும் கட்சியின் பலத்தை நிலைநாட்ட விரும்பினார் மெக்ரோன்.
ஆனால் அவரது கட்சியின் வேட்பாளர்களில் பெரும்பாலோர் மார்ச் 15ஆம் தேதியன்று நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளது அவருக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.