பாகிஸ்தானில் தாக்குதல்: 11 பேர் பலி

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள பங்குச் சந்தையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்கு தலில் 11 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. மாண்டவர்களில் தாக்குதலை நடத்திய நான்கு பயங்கரவாதிகளும் அடங்குவர்.

இந்தத் தாக்குதல் நேற்று நிகழ்ந்தது. காரில் வந்து இறங்கிய அந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிகளையும் கையெறி குண்டு களையும் வைத்திருந்ததாகவும் பாகிஸ்தானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பங்குச் சந்தைக்குள் அவர்கள் கையெறி குண்டை வீசியதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறினர். அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர்.

அவர்கள் நடத்திய இந்தத் திடீர் தாக்குதலில் பாதுகாவலர்கள் நால்வர், ஒரு போலிஸ் அதிகாரி, பொதுமக்களில் இருவர் ஆகியோர் மாண்டனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகள் நால்வரையும் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகள் வைத்திருந்த துப்பாக்கிகளையும் கையெறி குண்டுகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தாக்குதலுக்கு யாரும் பொறுப்பேற்கவில்லை. சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தடுப்பு போட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!