மியன்மார் மரகதக்கல் சுரங்கத்தில் நிலச்சரிவு; குறைந்தபட்சம் 100 பேர் உயிரிழப்பு

மியான்மர் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் உள்ள ‘ஜேட்’ எனப்படும் மரகதக்கல் சுரங்கத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100க்கு உயர்ந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால் நிலச்சரிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

304 மீட்டருக்கும் அதிகமான உயரத்திலிருந்து மண் சரிந்து சுரங்கத்தில் விழுந்ததாகவும் அதில், மரகதக் கற்களைச் சேகரித்துக்கொண்டிருந்த பல தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதாகவும் தகவல் அமைச்சு தெரிவித்தது.

தீயணைப்பு, மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுவரை சுமார் 100 தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!