லண்டன்: சீனா சர்ச்சைக்குரிய பாதுகாப்புச் சட்டத்தை அமல் படுத்தியிருப்பதால் ஹாங்காங்கின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கிறது.
இந்த நிலையில் ஹாங்காங்வாசி களுக்கு எதிர்காலத்தில் பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கு ஏதுவாக விசாவை வழங்க பிரிட்டன் அரசாங்கம் முன்வந்துள்ளது.
இதனை ஹாங்காங்வாசிகள் பலர் வரவேற்றுள்ளனர்.
இருந்தாலும் பிரிட்டனின் ‘நம்பிக்கை செய்தி’ பல இளையர்களுக்கு உதவாமல் போகலாம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1997ஆம் ஆண்டில் சீனாவிடம் ஹாங்காங் ஒப்படைக்கப்பட்ட பிறகு பிறந்தவர்களுக்கு தற்போது வயது 18 வயதாகிறது. இவர்கள்தான் பெய்ஜிங்குக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
“பிரிட்டனின் ‘நம்பிக்கை செய்தி’ ஹாங்காங்வாசிகள் அனை வருக்கும் ஏற்றதாக இருக்க வேண்டும். பல இளையர்கள் தங்களை ஹாங்காங்கிலிருந்து மீட்க வேண்டும் என்று காத்திருக்கின்றனர்,” என்று 2005ஆம் ஆண்டிலிருந்து லண்டனில் வசிக்கும் பெயர் தெரிவிக்க விரும்பாத 35 வயது நிதி ஆலோசகர் கூறினார்.
இவரது உறவினர்கள் ஹாங்காங்கில் இருப்பதால் அவர்களுடைய எதிர்காலம் குறித்து இவர் மிகவும் கவலையடைந்துள்ளார்.
“இத்தகையோருக்கு பிரிட்டனின் சலுகை நேரடியாக உதவாது. இவர்கள்தான் அதிகம் பாதிக்கப் படக்கூடியவர்கள். பல்கலைக்கழகத்திலிருந்து விலகிய இவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஹாங்காங்கில் வெடித்த ஜனநாயகத்துக்கு ஆதர வான ஆர்ப்பாட்டங்களை அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஜூன் 30ஆம் தேதி ஹாங்காங்கில் பாதுகாப்புச் சட்டத்தை சீனா அமலாக்கியது.
இதையடுத்து அமெரிக்கா, ஹாங்காங்குக்கு வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகளை ரத்து செய்துள்ளது. பிரிட்டனும் ஹாங்காங் வாசிகளுக்கு குடியுரிமை பெறுவதற் கான விசாவை வழங்கப் போவதாக அறிவித்துள்ளது.