நான்டெஸ்: பிரான்சின் மேற்கு நகரமான நான்டெஸில் உள்ள செயிண்ட் பியரி மற்றும் செயிண்ட் பால் கத்தோலிக்க தேவாலயத்தில் இன்று திடீர் தீ மூண்டது. இதில் 15ஆம் நூற்றாண்டின் கட்டடத்தின் முகப்பில் இருந்த கண்ணாடி சன்னல்கள் சேதமடைந்தன.
இந்தச் சம்பவத்தை அதிகாரிகள் குற்றச்செயலாக வகைப்படுத்தியுள்ளனர். தீச்சம்பவத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. தீ அணைப்பாளர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தாலும் கரும்புகை தொடர்ந்து வெளியேறியது.

