மெல்பர்ன்: ஆஸ்திரேலியாவின் மிகவும் பரபரப்பான மாநிலமான விக்டோரியாவில் நேற்று சனிக்கிழமை அன்று மட்டும் புதிதாக 217 பேர் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதற்கு முந்தைய நாளன்று புதிய உச்சமாக 428 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொவிட்-19 கிருமிப் பாதிப்பால் மேலும் இருவர் உயிரிழந்ததாக அம்மாநில முதல்வர் டேனியல் ஆண்ட்ரு தெரிவித்தார். இதனால் விக்டோரியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 34ஆக அதிகரித்துள்ளது.
அண்டை நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திலும் 15 பேர் புதிதாக பாதிக்கப் பட்டுள்ளனர்.

