கட்டுப்பாடுகளை பின்பற்ற எதிர்ப்பு

1 mins read
e50a3431-5b22-400e-bdbf-cf91a5cabe41
இந்தோனீசிய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வேலை உருவாக்க மசோதாவால் ஊழியர்கள் தங்கள் உரிமைகளை இழக்கக்கூடும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள மகளிர் போலிஸ். படம்: ஏஎப்பி, ஏனெக் பெர்ரி -

ஜகார்த்தா: இந்தோனீசியாவில் கிருமிப் பரவல் மோசமடைந்து வரும் நிலையிலும் சமூக இடைவெளி உத்தரவைப் பின்பற்றுவதற்கு மூன்றில் இருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிருமிப் பரவலைக் கட்டுப் படுத்துவதைவிட பொருளியலை மீட்பதில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வில் கலந்துகொண்ட 60.6 விழுக்காட்டினர் தெரிவித்து உள்ளனர். இந்தோனீசிய தனியார் ஆய்வு நிறுவனம் ஒன்று சுமார் 1,200 பேரிடம் தொலைபேசி வாயிலாக ஜூலை 13-16 தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த ஆய்வை மேற் கொண்டது. நேற்று ஆக அதிகமாக 139 பேர் கிருமித்தொற்றுக்குப் பலியாகினர். இதையடுத்து மாண் டோர் எண்ணிக்கை 4,459ஆக உயர்ந்துள்ளது. 91,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.