சோல்: தென்கொரியாவின் டேகு நகரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், 13 பேரில் ஒருவருக்கு கொரோனா கிருமியின் ஆண்ட்டிபாடி எனும் நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு கிருமிப் பரவல் தற்போதுள்ளதைக் காட்டிலும் 27 மடங்கு அதிகம் இருக்கலாம் என்கிறது ஆய்வு.
மே 25ஆம் தேதிக்கும் ஜூன் 5ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 2.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட டேகு நகரில் சுமார் 185,290 பேர் தொற்றுக்கு ஆளாகியிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
கொரோனா பரிசோதனை செய்துகொள்ளாத 198 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களில் 15 பேருக்கு அதாவது 7.6 விழுக்காட்டினருக்கு கொரோனா நோய் எதிர்ப்பு அணுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
ஜூன் 5ஆம் தேதி நிலவரப்படி டேகு நகரில் 6,886 உறுதிப்படுத்தப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியிருந்ததாக கொரிய மருத்துவ அறிவியல் சஞ்சிகையில் வெளியான இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, டேகு நகரவாசிகள் சுமார் 3,300 பேருக்கு நோய் எதிர்ப்பு அணு பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளதாக கொரிய நோய்த் தொற்று கட்டுப்பாட்டு மையத் தலைவர் தெரிவித்துள்ளார்.