ஈப்போ: மலேசியாவில் கொவிட்-19 தனிமைப்படுத்தல் உத்தரவின் போது உணவகத்திற்குச் சென்று உணவருந்திய பெண்ணிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்ற 4ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து மலேசியாவிற்குச் சென்ற 72 வயதான அப்பெண் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டது.
அப்போது அவருக்கு இளஞ்சிவப்பு பட்டை ஒன்று மணிக்கட்டில் கட்டப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஜூலை 6ஆம் தேதி அப்பெண்மணி மெரு ராயாவில் உள்ள உணவகத்தில் உணவருந்திய புகைப்படம் பலரது கண்டனத்தைப் பெற்றது. இந்நிலையில் தனிமைப்படுத்தல் உத்தரவின் 13ஆம் நாளில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கடந்த 17ஆம் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தி ஸ்டார் செய்தி கூறுகிறது. அவரது மகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

