பிரஞ்சு தேவாலயத்திற்கு தீ வைத்தது அங்கு பணிபுரிந்த தொண்டூழியர்

பிரான்சின் மேற்குப் பகுதியிலுள்ள 'நாண்ட' (Nantes) நகரின் பழம்பெரும் தேவாலயத்திற்குத் தீ வைத்தவர் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

இம்மாதம் 18ஆம் தேதியன்று நடந்த அந்தச் தீச்சம்பவத்தின் தொடர்பில் ருவாண்டாவில் பிறந்து பிரான்சுக்கு அகதியாக வந்த அந்த 39 வயது ஆடவர் நேற்று கைது செய்யப்பட்டார். அங்கு தொண்டூழியராகப் பணியாற்றி வந்த இவர் இதனை ஏன் செய்தார் என்பது தற்போது உறுதி செய்யப்படவில்லை. ஆயினும் அந்த ஆடவர் தமது செயலுக்காக மிகவும் வருந்துவதாக அவரது வழக்கறிஞர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்தக் குற்றத்திற்காக அவர் 10 ஆண்டுகள் வரை சிறை செல்லலாம். அத்துடன் அவர் 150,000 இயூரோ வரையிலான அபராதத்தையும் எதிர்நோக்குகிறார்.

15ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டின்போது கட்டி முடிக்கப்பட்ட இந்த தேவாலயத்தின் பல்வேறு பகுதிகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!