ஹாங்காங்: கிருமிப் பரவல் அச்சம் காரணமாகத் தேர்தலை அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6ஆம் தேதிக்குத் தள்ளி வைப்பதாக ஹாங்காங் தலைவர் கேரி லாம் அறிவித்துள்ளார்.
கிருமித்தொற்று உச்சமடைந்து வருவதால் இந்த கடினமான முடிவை எடுக்க நேர்ந்ததாக அவர் சொன்னார்.
ஆனால், மக்கள் வாக்களிப்பதைத் தடுக்க, தொற்றுநோயை அரசாங்கம் ஒரு சாக்குபோக்காகப் பயன்படுத்துவதாக எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
சீனா தேசிய பாதுகாப்பு சட்டத்தைக் கொண்டு வந்ததையடுத்து, சட்டமன்றத்தை கைப்பற்றிவிடலாம் என்று எதிர் தரப்பினர் நம்பிய நிலையில் இந்த முடிவு, அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஜனநாயக சார்பு ஆதரவாளர்கள் 12 பேர் தேர்தலில் போட்டியிட நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.