பெய்ஜிங்: கிருமித்தொற்று பரவத் தொடங்கிய பிறகு, பருவ காலத்தில் ஏற்படக்கூடிய சாதாரண சளிக்காய்ச்சல் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோர் விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக முதற்கட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கிருமித் தொற்றுவதில் இருந்து தப்பிக்க, கடைப்பிடிக்கப்படும் சமூக பாதுகாப்பு இடைவெளி காரணமாக சளிக்காய்ச்சல் உள்ளிட்ட மற்ற தொற்று நோய்கள் பரவுவது எதிர்பாராத வகையில் குறைந்துள்ளதை இது குறிக்கிறது.
முதன்முதலாக கட்டுப்பாட்டு நடவடிக்கையை நடைமுறைப்படுத்திய சீனாவில் சளிக்காய்ச்சல் மட்டுமல்லாமல் தாளம்மை, தட்டம்மை, பால்வினை நோய்கள் போன்றவையும் குறிப்பிட்ட அளவு குறைந்துள்ளன.
முடக்க உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வோர் மாதமும் பதிவாகும் நோய்தொற்றுகளின் விகிதம் 90 விழுக்காட்டிற்கும் மேல் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சராசரியாக ஒரு மாதத்திற்கு 290,000ஆக இருந்த அந்த எண்ணிக்கை 23,000ஆக குறைந்துள்ளது.
அதுபோல் கனடாவிலும் எதிர்பாராத அளவுக்குக் குறைவான எண்ணிக்கையில் சளிக்காய்ச்சல் பதிவானதாக அந்நாட்டின் காய்ச்சல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்ததைவிட நோய் தொற்றின் விகிதம் 83 விழுக்காடு குறைந்துள்ளதாக தென்கொரிய தொற்றுநோய்கள் மையத்தின் அண்மைய வார அறிக்கை கூறுகி
றது. ஆனால் சளிக்காய்ச்சல் நோய்தொற்று பெருமளவு குறைந்துள்ளது சுகாதார அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைத்திருந்தாலும், இனிவரும் பருவங்களில் அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.