சிட்னி: கிருமித்தொற்றின் இரண்டாவது அலை ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் அச்சுறுத்தல்
நிலவுவதால், பெரும்பாலான பொருளியல் நடவடிக்கைகளை மூடுவதற்கு அந்நாடு தயாராகி வருகிறது.
குழந்தைப் பராமரிப்பு மையங்களை மூடுவது மற்றும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகச்சை அளிக்கும் விதமாக மருத்துவ வளங்களை விடுவிப்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அறுவை சிகிச்சைக்கான தடையை விரிவுபடுத்துவது ஆகியவையும் அதில் அடங்கும் என்று விக்டோரியா மாநிலத் தலைவர் டேனியல் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.
இதற்கிடையே, விக்டோரியாவில் இருந்து வருபவர்களுக்குத் தடை விதித்திருந்த குயின்ஸ்லாந்து மாநிலம், தற்போது நியூ சவுத் வேல்ஸ் மற்றும் கேன்பரா பயணிகளுக்கும் சனிக்கிழமை முதல் தடை விதிப்பதாக அதன் தலைவர் தெரிவித்தார்.
குயின்ஸ்லாந்தில் இரண்டு மாதங்களாக சமூக பரவல் இல்லாத நிலையில், தற்போது மூன்று சமூகப் பரவல் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டு
உள்ளதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அதோடு ஆஸ்திரேலியாவில் கிருமித்தொற்றால் ஒரே நாளில் மேலும் 15 பேர் மாண்டனர். இது அந்நாட்டின் ஆக அதிக அன்றாட பலி எண்ணிக்கையாகும். இவை விக்டோரியா மாநிலத்தில் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
மெல்பர்னில் நேற்று 725 கிருமித்
தொற்றுச் சம்பவங்கள் பதிவாகின. நியூ சவுத் வேல்சில் புதிதாக 12 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.