அமெரிக்காவில் கொவிட்-19 கிருமிப்பரவல் தற்போது மிக மோசமாக உள்ள நிலையில் அங்கு தொடர்ந்து கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வோருக்கு எதிராக லாஸ் ஏஞ்சலிஸ் நகரம் புதிய உத்தி ஒன்றைக் கையாண்டுள்ளது.
அதிகம் பேர் திரளும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்பவர்களின் வீடுகள், கடைகள் அல்லது மற்ற நிகழ்ச்சி இடங்களில் தண்ணீர், மற்றும் மின்சார விநேயோகம் அந்நகரில் ரத்து செய்யப்படும்.
"சுகாதார பாதுகாப்பு உத்தரவை அப்பட்டமாக மீறும் விதமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்களும் ஒன்றுகூடல்களும் நிகழ்வதைக் கேள்வியுற்றோம்," என்று லாஸ் ஏஞ்கலிஸ் மேயர் எரிக் கார்செட்டி தெரிவித்தார்.
இவ்வாரம் கலிஃபோர்னியா மாநிலத்தில் அண்மையில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட பெரும் ஒன்றுகூடலில் துப்பாக்கிச்சூடு நடந்ததை அடுத்து இந்த உத்தரவு வெளிவந்தது.