பெய்ரூட்: பெய்ரூட்டில் நிகழ்ந்த பயங்கர வெடிப்புச் சம்பவத்தால் பேரதிர்ச்சியிலிருந்து மீள முடியாத மக்கள் தங்களுடைய கோபத்தை அரசாங்கத்தின் பக்கம் திருப்பி யுள்ளனர். அரசாங்கத்தின் கவனக்குறைவால்தான் இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
கிடங்கில் பாதுகாப்பற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்ட 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட்டால் வெடிப்பு ஏற்பட்டது என்று அதிபர் மிக்கெல் அவுன் கூறியுள்ளார்.
ஆனால் அரசாங்க அதிகாரிகளின் ஊழல், கவனக்குறைவு மற்றும் நிர்வாகத் திறமையின்மை யால் வெடிப்பு ஏற்பட்டது என்று பலர் சாடியுள்ளனர். செவ்வாய்க்கிழமை அன்று பெய்ரூட் துறைமுகத்தில் இருந்து சில நூறு மீட்டர் தொலைவில் உள்ள கிடங்கு தீப்பிழம்புகளுடன் வெடித்துச் சிதறியது. இதில் 135 பேர் மாண்டனர். நான்காயிரத்துக்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு வாரம் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
“ெபய்ரூட் நகரமே கதறி அழுகிறது, மக்கள் மிரண்டு போயுள்ளனர், களைப்படைந்துவிட்டனர்,” என்று திரைப்படத் தயாரிப்பாளரான ஜுட் செஹப் கூறியதாக பிபிசி தெரிவித்தது.
சம்பவத்திற்கு காரணமானவர்களை விசாரித்து நீதியின் முன் நிறுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.