நான்காவது முறையாக பிரதமராகிய ராஜபக்ச

இலங்கையில் சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்த ராஜ்பக்சே பிரதமராக மீண்டும் பதவியேற்றுள்ளார். இலங்கையின் 28ஆவது பிரதமரான ராஜபக்சே நன்காவது முறையாக இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

இம்மாதம் 5ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திரு ராஜ்பக்சேவின் இலங்கை பொதுஜன கட்சி (எஸ்எல்பிபி) கிட்டத்த மூன்றில் இரண்டு பங்கு இடங்களைக் கைப்பற்றி அரசாங்கத்தை அமைத்துள்ளது.

இந்நிலையில் சீனப் பிரதமர் லீ கெ சியாங் திரு ராஜபக்சேவுக்கு வாழ்த்து கூறியுள்ளார். சீனாவும் இலங்கையும் பாரம்பரியமிக்க நட்புறவைக் கட்டிக்காப்பதாகக் கூறிய திரு லீ, இரு நாடுகளுக்கும் இடையிலான உத்திபூர்வ பங்காளித்துவம் வேகமாக மேம்பட்டிருப்பதாகவும் பல்வேறு துறைகளில் இந்த கூட்டுறவு ஆழமானதாகவும் அகலமானதாகவும் குறிப்பிட்டார். இந்த இரு நாடுகளுமே கொரோனா கிருமிப்பரவலுக்கு எதிராக ஒன்றாக போராடுவதாகவும் அவர் கூறினார்.

புதிய நாடாளுமன்றம் ஆகஸ்ட் 20ஆம் தேதி கூடும் என்று இலங்கையின் அதிபரும் திரு ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபய ராஜபக்ச அறிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!